சனி, 12 செப்டம்பர், 2015

யாவர்க்குமிங்கு தகுதியுண்டு

வீதியெங்கும் விழிவுண்டு மங்காச் சுடரொளியாளுண்டு
நாளும் கரைந்து வளர்வதுண்டு கவனிப்பாரில்லாது களிப்புண்டு
பெரும் மலை மோதி புகையாகி நில்லாது போவதுண்டு
காரிருள் தனிமை நீக்கிடக் காதுமடலெனக் கேட்பதுண்டு
நீரோடையில் நிழலுண்டு நிகழ் விரல் சிக்கிடா அருகிலுண்டு
வா வா என தென்னங்கீற்று அழைப்பதுண்டு இளநீர் தவிப்பதுண்டு
வலம் வரும் வண்டுண்டு மலரென்று மொய்த்திடின் தேன் உண்டு
எட்டாக் கூடென்று சிறகசைக்கும் பறவைகண்டு சிரிப்பதுண்டு
பால் குளமுண்டு அழும் குழந்தைக்கிங்கு பசியாற்றுதலுண்டு
பாரினில் பார்த்தவர் பார்வையில் பண் இசைப்பதுண்டு
இதுவே நற் கள்ளென்று பருகியவர் மயங்கிப் புகழ்வதுண்டு
மூளும் போர்வுண்டு, பொழியும் அம்புண்டு
மின்னல் வாளுண்டு, காக்க கேடயமுண்டு
கெண்டை மீனிங்கு துள்ளிக் குதித்து விளையாடுவதுண்டு
மிதக்கும் பந்தொன்று வெடிக்கா காற்றதிலுண்டு
பொழுதை சமைத்துண்ணும் பெரும் தட்டுண்டு
பேரழகுப் பேதையே உனைக் காதலிக்க பேதமையன்று
மண்ணில் யாவர்க்குமிங்கு தகுதியுண்டு ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக