சனி, 12 செப்டம்பர், 2015

கண்ணம்மா

உள்ளம் கலங்குதடி
கண்ணம்மா...
உண்மை ஊமையாகையிலே ;


நெஞ்சம் பதறுதடி
கண்ணம்மா...
நேர்மை சாகையிலே ;


சொல்லில் வேல் பாயுதடி
கண்ணம்மா...
மிகு ஏழை என்கையிலே ;


கண்ணில் முள் தைக்குதடி
கண்ணம்மா...
அடிமை என்றாகையிலே ...


பள்ளி பல்கிப் பெருகியும்
நம் பாடது தீரவில்லையே ;
கல்வி ஓங்கிப் பரவியும்
நாளும் பேதமை நீங்கவில்லையே ;


கோபம் மூளுதடி
கண்ணம்மா...
நிதம் அஞ்சி வாழ்கையிலே


நெஞ்சம் வேகுதடி
கண்ணம்மா
சிறு கஞ்சிக்கு அழுகையிலே ...


எங்கும் சுதந்திரமா ?
பின் ஏற்றத் தாழ்வது எழலாமா ?
யாவருமிங்கு சமமா ?
பின் வீண் பிரிவினை வரலாமா ?


ஞாயம் என்னம்மா ?
கண்ணம்மா
அது காகித தாளா சொல்லமா ?


பாவம் கூடாதம்மா
கண்ணம்மா
பாரில் பலமதுவே சட்டமா ?


நல் ஏடுகள் இங்கிருந்தும்
நாளும் கேடுகள் விளைவது ஏன் ?
நன்மை யாவிலிருந்தும்
பொல்லாத் தீமை புகுவது ஏன் ?


பேராசை தானடி
கண்ணம்மா
தானெனும் ஆணவமடி


மோசம் செய்வாரடி
கண்ணம்மா
காரிய பாசமது மெய்யோடி ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக