சனி, 12 செப்டம்பர், 2015

** மீரா **

இதழ் கொடியில் காயும் வார்த்தைகள்

உலர்வதற்குள் சீக்கிரம் உதிர்த்திடு
உலறல்கள் முத்தங்களாகட்டும்

நினைவுகளை அடுக்கிவைக்கும் அறைகள்
முழுவதும் வந்தமர்ந்து நிரம்பிவிடு
இரவுகள் யாவும் கனவுகளாகட்டும்

மெளனங்களில் துடிக்கும் ஓசைகளின்
நிச­ப்தங்களில் நீந்திக் கரையேறிவிடு
எழுத்துக்கள் யாழ் மீட்டட்டும்

பார்வைத் தேடலின் தூரங்களை
இரு விழித் தேயும் வரை படரவிடு
மாயங்கள் கைகளில் அகப்படட்டும்

மீளாத் தவமிது சோகம் புற்றாய் வளருது
தீராக் காதலிது சேரா தாகமது
வெண்புறா அழைக்கிறது தம்புரா அழுகிறது

ஏன்
கண்ணா
நான்
மீரா


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக