சனி, 12 செப்டம்பர், 2015

ஓணம்

மா தோரணம் வாயிலெங்கும்
மா வலி நீங்கி இன்பம் பொங்கும்
வா மணன் அவதரித்த நாளாகும்
வா னம் அளந்த ஓரடி நினைவாகும்
பூ வண்ணம் வீதியெங்கும்
பூ வையர் ஆடை வெண்ணிறமாகும்
ஆ வென ஆவல் வஞ்சிப்பாட்டாகும்
ஆ வணியில் பூக்கும் அத்தப்பூ கோலமாகும்
தா வெனக் கேட்போருக்கு தலை தந்தவனாகும்
மா பலி மன்னன் வருவான் வீடெங்கும்
அத்தம் ஆதாரம் பத்தென நட்சத்திரம்
முற்றும் திருவோணம் வைபவம் - எங்கள்
பெரு ஓணம் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக