ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா 10

தீராவும்
மீராவும்
எதிர் எதிரே என்னாகும் ?

வெட்கம் உடையும்!
வெப்பம் உருகும்!
வேகம் கூடும்!
மோகம் பெருகும்!
ஞாபகம் மோதும்!
விரல்கள் தாவும்!
குரல்கள் அடைபடும்!
மயக்கம் வகுப்பெடுக்கும்!
தயக்கம் தற்கொலை செய்யும்!
ஓசைகள் செவிடாகும்!
காட்சிகள் குருடாகும்!
இருள் இன்பமாகும்!
வெளிச்சம் கூச்சமாகும்!
பசி படத்துறங்கும்!
ருசி நாவை விட்டிறங்கும்!
உதிரம் நோகும்!
உணர்வு வேகும்!
இமைகள் ஒட்ட மறுக்கும்!
உதடுகள் ஒட்ட துடிக்கும்!
எனக்கு நீ!
உனக்கு நான்!
இனி...
எல்லாம் வசப்படும்
நமக்கு!

இப்படி ஆகும்!


தீராவின் உதடுகள்
திடீரென திறந்தது !

வார்த்தை சில நேரம்
உணர்ச்சிக்குள்
மாட்டிக் கொள்ளும்
அப்போது
நாம்
மற்றவர்களை கொல்வோம் !

தீரா!
தேய்ந்து போன
வார்த்தைகளால்
பேச தொடங்கினான்!

முதலில்
யார் நீ?

மீரா!
மெளனம்!

தீரா!
எந்த ஊர்?
என்ன பெயர்?
எப்போதெல்லாம்
இங்கு வருவாய்?
என்னை பார்த்திருக்கிறாயா?
ஏன் வந்தாய்?
எப்போது வந்தாய்?
கேள்விகள் நீண்டன!

மீரா!
மெ...ள...ன...ம்...

தீரா!
மெ...ள...ன...ம்...

மீரா!
உதடு உதிர்த்தது!
ம்.....

என் பெயர்
மீரா!

தீரா!
சொல்லி பார்த்தான்
முதல் முதலாக பேசும்
குழந்தையாய்
மீரா வின் பெயரை!

மீரா!
உடையூர் எனதூர்!
முன்பு பார்த்தில்லை!
அடிக்கடி இங்கு வருவதுண்டு
தோழிகளுடன்!

தீரா!
மானை தின்ற
மலைப் பாம்பாய்!

தீரா!
எங்கே தோழிகள்!

மீரா!
தனிமை!

தீரா!
எனை பார்க்கவா?

மீரா!
மீண்டும்
மெ...ள...ன...ம்...

இளைபாற விரும்பவில்லை
எனது பெயர்
தீரா!

மீரா!
இதழ்
சிவத்தது!

தீரா-மீரா!
உயிரா-உடலா !

உதடுகளின் பாசையை விட
கண்களின் பாசையே
கனமானது!

மின்னலின்
பின்னலில்
முளைக்கும் காளானாய்!

கண்களின்
பின்னலில்
பேசியது காதலாய்!


மாலை (பொழுது)
வாட ஆரம்பித்தது!

கருப்பு ( உடை)
உடுத்த தொடங்கியது!

மீரா!
உணர்ந்தாள்!

உதிர்த்தாள்
வருகிறேன்!

தீரா!
அவசரம் ஏன்?

மீரா!
மாலை ரசம் மறைகிறதே!

தீரா!
அடுத்து எப்போது ?

மீரா!
நாளை இப்பொழுது!

தீரா!
உறுதியாகவா?

மீரா!
மெ...ள...ன...ம்...

தீரா!
மெ...ள...ன...ம்...

மீரா!
பறக்க ஆரம்பித்தாள்!

தீரா!
ஒரே இடத்தில்
பறந்து கொண்டே பார்த்தான்!

ஒரு நாள்
எப்போது முழுமையடையும்?
பகலும் இரவும்
கடக்கும் கணத்தில்!

ஒரு ஓவியம்
எப்போது அழகாகும் ?
கலை கண்களுக்குள்
வரையப்படும் போது!

ஒரு கவிதை
எப்போது உயிர்க்கும்?
ரசனையின் உதடுகள்
உரசும் பொழுது!

ஒரு கல்
எப்போது சிற்பமாகும்?
உளியும் விரல் நுனியும்
சந்திக்கும் வேளையில்!

ஒரு உறவு
எப்போது மலரும்?
இதயமும் விழிகளும்
இணையும் போது!


இரு மனம்
எப்போது ஒன்றாகும்?
உடல் பிரிக்கப்பட்டு
உயிர் பிணையப்படும் போது!

தீரா-மீரா
பிணைப்பு
ஆரம்பமானது!


தீரா- மீரா
இணைப்பு
துளிர் விட்டது!

தீரா- மீரா
நினைவு
இறுக்கப்பட்டது!

தீரா- மீரா
கனவு
களவாடப்பட்டது!

தீரா- மீரா
உணர்வு
வார்க்கப்பட்டது!

தீரா- மீரா
கவிதை
முழுமையாக வாசிக்கப்பட்டது!!


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக