ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா 6

மீரா பூவாக !
தீரா புயலாக!
மீரா நதியாக!
தீராக கடலாக!
மீரா வண்ணத்து பூச்சியாக!
தீரா ஓவியனாக!
மீரா வானமாக!
தீரா மேகமாக!
விண்மீன் கூட்டத்திற்கு நடுவில்
நிலவாக நின்றிருந்தாள் மீரா !
பொம்மையை தேடும்
குழந்தையாக மீரா அருகில் தீரா!

யார் ? யார் ?
திடுக்கிட்டாள்!
தீயாகினாள்!
திக்கித்தாள்!
ஊமையாகினாள்!
நடுங்கினாள்!
கலங்கினாள்!
நிசப்தம்
நீண்டது !
பார்வைகள்
மோதியது!
தோழிகள்
விலகினர்!
மீரா!
மயங்கினாள்!
நாணமானாள்!
வசியமானாள்!
லகித்தாள்!
துள்ளினாள்!
உள்மூச்சு வாங்கினாள்!
உடைந்தாள்!
உருகினாள்!
இறுதியில்....
தீரா விழியில்
கைதியாகினாள்!

ஒரு ஆண்
ஒரு பெண்ணை ரசிக்க
யுகங்கள் போதாது!
ஒரு பெண்
ஒரு ஆணை ரசிக்க
சில நிமிடங்கள் அதிகமானது!
தீராவை!
மீரா!
சில நிமிடத்தில்
சிறு விழியில்
சிறைபிடித்தாள்!

கற்றுக் கொள்ளுதல் என்றானால்
தவழுதல் கூட கடினம் தான்!
ஒட்டி கொண்ட பிறகு பிரித்தல் என்பது
தழுவலுக்கு பின் கடினம் தான்!
தீரா!
மீரா!
விழிகள்!
கற்றுக் கொண்டது!
ஒட்டிக் கொண்டது!
காற்று உரசி கடந்துவிடும்
பின்புதான் நடக்கும்
இலை அசைவு!
மேகம் மோதி கடந்துவிடும்
வேகமாய் நகர்வதாய்
நிலா தோன்றும்!
நதியில் தண்ணீர் நில்லாது ஓடிவிடும்
மண்ணில் ஈரம் நீங்காது
தங்கிவிடும்!
ஒருவரை ஒருவர்
பார்வையில் தின்றபடி
திணறி கொண்டிருந்திருந்தனர்!
கல கல வென
தோழியர்கள் சிரிப்பு!
உணர்ந்தாள் மீரா!
தீரா உலகத்தில் கடத்தப்படுவதை!
வானவில்லின் வர்ணமாய்
வெட்கம் பூசிக் கொண்டு
தீராவை தாண்டினாள் மீரா!

அலை ஆவேசப்பட்டால்
சுனாமி!
நெருப்பு ஆவேசப்பட்டால்
சுடுகாடு!
காற்று ஆவேசப்பட்டால்
புயல்!
மழை ஆவேசப்பட்டால்
வெள்ளம்!
காதல் ஆவேசப்பட்டால்
காமம்!
மீரா!
கடக்க !
தீரா
தடுக்க!
ஆவேசப்பட்டால்
மீரா!
ஒரு
பூ
தீயானால் என்னாகும்?
ஒரு
நிலா
மூர்க்கமானால் என்னாகும்?
ஒரு
புறா
புலியானால் என்னாகும்?
ஒரு
புல்
கூர்வாள் ஆனால் என்னாகும்?
ஒரு
மெளனம்
அலறி கதறினால் என்னாகும் ?
அப்படி ஆனாள்
கை தீண்டி
தீரா!
தடுக்க!
மீரா!
புல்லாங்குழலை
பிடித்து
வாசிக்கும் இதழ் என்னவாகும்?
கிளைகளை
தாங்கி
ஆடும் தேனடை என்னாகும்?
நீரில்
மோதி
முகம் துடக்கும் காற்று என்னாகும்?
நிலா
உரசி
தேகம் உருகும் மேகம் என்னாகும்?
அப்படி ஆனான்!
தீரா!
மீரா!
விரல்
தீண்டியதும்!
ஒரு
நினைவில்
பூ!
ஒரு
நினைவில்
தீ!
ஒரு
கரையில்
குளிர்!
ஒரு
கரையில்
கொதிப்பு!
ஒரு
பாதியில்
உயிர்!
ஒரு
பாதியில்
சடலம்!
ஒரு
நுனியில்
அருவி!
ஒரு
நுனியில்
எரிமலை!
ஒரு
மன நிலையில்
தீரா!
ஒரு
மன நிலையில்
மீரா!
விடுக்கென்று
விரல் உதறி
உருவிச் சென்றால் மீரா!
படக்கென்று
விழி வழுக்கி
ஊடுறுவி தொடர்ந்தான் தீரா!
தோழிகள்
கேலியில்
துவண்டாள் மீரா!
தோழ்வியில்
வலியில்
தும்சமானான் தீரா!
சூறாவளி கடப்பதாய்
விர்ரென
கடந்தாள் மீரா!
சூரியன் விழுந்ததாய்
சுருண்டு
தேய்ந்தான் தீரா!
(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக