ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா 9


காத்திருப்பின்
நுனியில்!
திரியில் ஆடும் தீபமாய்!
தீரா!

காற்றில்
சிக்கிய காகிதமாய்!
கலக்கம்
தாண்டிய பெண்மையாய்!
மீரா!


ஆற்றங்கரை வரை
இறாகய் வந்த மீரா!
அடுத்த அடி வைக்க
பாதங்களை பாறைகளாக்கினாள்!

கரையும்
நிலையில்!
கரை வந்தாள்
மீரா!

மறு கரையில்
விழி வலையில்
தேடிக் கொண்டிருந்தான்
மீராவை - தீரா!

தூரத்தில்
துடிக்கும் நட்சத்திரமாய்!

மேகத்துணி
துடைத்தெடுத்த நிலவாய்!

பூமி
வந்திறங்கிய வானவில்லாய்!

புள்ளிகளால்
நிரப்பிய பூப்பந்தாய்!

தீராவின்
விழியில்
மீரா!
தூரத்தில்!!

பெண்களின் வெற்றிக்கு பின்னாள்
மூன்று முக்கிய காரணங்கள்
முகாமிட்டிருக்கிறது!

அழகு!
அழுகை!
பிடிவாதம்!

சில வெற்றிகள்
பிடிவதாத்தின் முனையில்
தீட்டப்படிருக்கும்!

பல வெற்றிகள்
அழுகையின் துளிகளில்
எழுதப்பட்டிருக்கும்!

இரண்டையும் விட
இந்த உலகில்
அழகினால் எழுப்பப்பட்ட
வெற்றிகளே அதிகம்!


தீரா!
மீராவின்
அழகில்!!


ஆண்கள் உடைதலுக்கும்
மூன்று முக்கிய காரணங்கள்
மூழ்கியிருக்கிறது!

காதல்!
காமம்!
பணம்!


பணத்தால் உடைபட்ட
உள்ளங்கள் சில!

காமத்தால் கரைந்த
உருவங்கள் பல!

கால சக்கரத்தில்
காதலால் உருவாக்கப்பட்ட
கல்லறைகள் அதிகம்!

தீரா!
காதலால்
உடைக்கப்பட்டான்!

விதை உயிர்த்து விட்டால்
பாறைகளை கூட துளைத்விடும்
வேர்கள்!

நதி
மலையிலிருந்து குதித்துவிட்டால்
மீண்டும் மேல் எழும்புவதில்லை!


அலை
கரையை தொட்டுவிட்டால்
நுரைகளுக்கு கூலி கேட்பதில்லை!

காதல்
இதயங்களில் வரையப்பட்டால்
வரம்புகள் விழிகளுக்கு புலப்படுவதில்லை!

தீரா!
மீரா!
இருவருக்கும்
வரம்புகளின் இடைவெளி
ஆற்றங்கரை மட்டுமே!

யார்
முதலில்
யாரிடம்
நோக்கி வருவது ?


பூவைத் தேடி
வண்டு!

தேனைத் தேடி
தேனீ!

மண்ணைத்தேடி
மழை!

விண்னைத்தேடி
மலை!

புல்லைத்தேடி
பனி!

தற்போது
மீராவை நோக்கி
தீரா!


தீரா!
மீரா அருகில்
ஊமையாக!

மீரா!
தீரா பக்கத்தில்
பொம்மையாக!

கண்ணாடியும்
கண்ணாடியும்
பார்த்துக் கொண்டால் என்னாகும்?
பிம்பங்கள் ஒன்றாகும்!

தண்ணீரும்
கண்ணீரும்
ஒன்றானால் என்னாகும்?
உவர்ப்பு அர்த்தமுள்ளதாகும்!

காற்றும்
வாசமும்
இணைந்தால் என்னாகும் ?
உருவமற்றது புது உயிராகும்!


காதலும்
இதயமும்
கலந்தால் என்னாகும்?
எதையும் தாங்கும் பலம் உருவாகும்!


தீராவும்
மீராவும்
எதிர் எதிரே என்னாகும் ?

(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக