பெரும் பஞ்சம் வந்து பசி தின்றபோதும் எவர்க்கும்
அடிபணிந்து போவதில்லை
நெஞ்சு கூடு நெருப்பினில் வெந்தபோதும் நேர்மையது மாறுவதில்லை
உடலினை கூறுபோட்டு கொன்றபோதும் குந்தகம் செய்வதில்லை
வானகமும் வையகமும் தந்தபோதும் வாய்மை தவறுவதில்லை
ஆதவனே நேரில் வந்து நின்றபோதும் அஞ்சுவதில்லை
காரியமது ஆகவே இரு கை கூப்பிக் கெஞ்சுவதுமில்லை
மாயையே ஆசை தந்து எனை ஆள்வதென்பது ஆவதுமில்லை
ஆகையால் நீ வந்த வழி சென்றுவிடு
நான் அழியா தமிழ் பிள்ளை ~~~
அடிபணிந்து போவதில்லை
நெஞ்சு கூடு நெருப்பினில் வெந்தபோதும் நேர்மையது மாறுவதில்லை
உடலினை கூறுபோட்டு கொன்றபோதும் குந்தகம் செய்வதில்லை
வானகமும் வையகமும் தந்தபோதும் வாய்மை தவறுவதில்லை
ஆதவனே நேரில் வந்து நின்றபோதும் அஞ்சுவதில்லை
காரியமது ஆகவே இரு கை கூப்பிக் கெஞ்சுவதுமில்லை
மாயையே ஆசை தந்து எனை ஆள்வதென்பது ஆவதுமில்லை
ஆகையால் நீ வந்த வழி சென்றுவிடு
நான் அழியா தமிழ் பிள்ளை ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக