சனி, 7 நவம்பர், 2015

அடிபணிந்து போவதில்லை

பெரும் பஞ்சம் வந்து பசி தின்றபோதும் எவர்க்கும்
அடிபணிந்து போவதில்லை
நெஞ்சு கூடு நெருப்பினில் வெந்தபோதும் நேர்மையது மாறுவதில்லை
உடலினை கூறுபோட்டு கொன்றபோதும் குந்தகம் செய்வதில்லை
வானகமும் வையகமும் தந்தபோதும் வாய்மை தவறுவதில்லை
ஆதவனே நேரில் வந்து நின்றபோதும் அஞ்சுவதில்லை
காரியமது ஆகவே இரு கை கூப்பிக் கெஞ்சுவதுமில்லை
மாயையே ஆசை தந்து எனை ஆள்வதென்பது ஆவதுமில்லை
ஆகையால் நீ வந்த வழி சென்றுவிடு
நான் அழியா தமிழ் பிள்ளை ~~~ 


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக