வியாழன், 18 பிப்ரவரி, 2016

உனக்கே நான் எப்போதும்


விழி தொடும் இமையாவேன்
வலி தாங்கும் தோளாவேன்
நெடுந்தூர பயணத்தில்
உன்னிரு பாதம் நானாவேன் ...

உள்ளங்கை விரலாவேன்
உள்ளத்தின் நிழலாவேன்
உனக்கே நான் எப்போதும்
தாலாட்டும் தாயாவேன் ...

அந்த நிலாவின் ஒளியினில் மறைந்து உனை ரசித்திடுவேன்
தூக்கம் வராத கனவிலும்
விழித்திருந்து கதை பேசிடுவேன்
மறுபடியும் நான் பிறப்பதென்றால்
உனை அகலாது வரம் கேட்டிடுவேன்...

சொல்லாத ஆசைகள் ஒவ்வொன்றாய் நீ செய்ய மயங்கிடுவேன்
நீ இல்லாத பொழுதுகள் மீது கோபம் கொண்டு அழுதிடுவேன்
தொடரும் நிழலும் உனைத்
தொடவே நான் துடித்திடுவேன்...

மடி மீது உனை சாய்த்து
தலை முடி நீவி முகம் பார்த்து
பிடிவாத முத்தம் கேட்டு
இடை பிரியாது யுத்தம் நடத்து
புது மலராக எனை பறித்து
மார் மீது நீ உடுத்து...


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக