வியாழன், 18 பிப்ரவரி, 2016

தித்தோம்... தித்தோம்...


காலை கதிரினிலே
காக்கை குருவி சிறகினிலே
கொண்டை சேவல் கூவும் அழகினிலே
மனம் இன்பமாகி கொள்ளை போகிறதே ;

சுடரொளி கடல் மூழ்கி எழுகையிலே
இளம் தளிர் இலை மீது தலை மோதுகையிலே
எங்கும் சுகந்த காற்று படர்கையிலே
மேனி சுடச்சுட குளிர் மெல்லென நீங்கிடுதே ;

கானக் குயில் காதல் ராகம் இசைக்கையிலே
கன்று காம்பு முட்டி பால் குடிக்கையிலே
மேகம் ஓடி ஆடி பந்தாடுகையிலே
புது மோகம் பிறந்து நெஞ்சமது துள்ளுகிறதே ;

ஆனை அழகு அம்புட்டும் போகையிலே
வெண் பானை எங்கும் பொங்கி வழிகையிலே
ஆரம்பமாகுது யாவும் மலர் சோலையிலே
நானோ அடிபணிந்து பம்பரமாய் ஆடினேன் ஆனந்தமே...

தித்தோம்... தித்தோம்...
ஆனந்தமே....

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக