வியாழன், 18 பிப்ரவரி, 2016

நந்தலாலா

நதிக் கரையினிலே
நந்தலாலா
மனம் துள்ளி குதிப்பது ஏன்
நிந்தன் வருகையாலா

பனிப் பொழிவினிலே
நந்தலாலா
இமை குடை விரிப்பது ஏன்
நிந்தன் சிரிப்பினிலா

ஒளி பரப்பினிலே
நந்தலாலா
இருள் விழிப்பது ஏன்
நிந்தன் பார்வையிலா

எழில் வனப்பினிலே
நந்தலாலா
புது ஏகாந்தம் பிறப்பது ஏன்
நிந்தன் ரசிப்பினிலா

ஒலி இழப்பினிலே
நந்தலாலா
நிதம் எனை இழப்பது ஏன்
நிந்தன் மௌனத்திலா

பதில் சொல்லடி
எந்தன் வானத்து
வெண்ணிலா~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக