வியாழன், 18 பிப்ரவரி, 2016

சுடரொளி பாயுதடி


சுடரொளி பாயுதடி நெஞ்சினிலே
பெருஞ் சூரியன் எரியுதடி இரு கண் விழியினிலே
கொடுமை யாவும் ஓடிட விரட்டிட வேண்டுமடி இப்பொழுதினிலே
நம் உடமை யாவும் பொதுவினில் ஆக வேண்டும் உண்மையிலே...

மடமை முற்றும் இன்றே மடிந்திட வேண்டும் வீதியிலே
மலரும் பூவாய் நாளும் நல்வினை நிகழ வேண்டும் பாரினிலே
அடக்கும் குணங்கள் அரவே நீங்கி சமமாக வேண்டும் சடுதியிலே
நாம் எதற்கும் யினி அடிமை இல்லை என ஓங்கி ஒலிக்க வேண்டும் இமய மலையினிலே...

மாதரினை முடக்கும் செயல் யாவினையும் ஒடுக்க வேணுமடி நெஞ்சுரத்தினிலே
பெண் பரா சக்தியென்று தீயோரை விரட்டிட வேணுமடி சிறு முறத்தினிலே
எதிர் வரும் படை நடுங்க உடன் தோள் உயர்த்திடடி வீரமகளே
எங்கும் வீழ்வதில்லை பாயும் வேங்கையென மாறிடடி பூ மகளே...

கடல் கடந்தும் நம் மொழி வாசம் வீச வேணுமடி வான் மீதினிலே
கண்ணுறக்கம் இனியில்லை பாரெங்கும் விவசாயம் பேண வேணுமடி நிலத்தினிலே
பசி பஞ்சம் நீங்க எங்கும் நெல் மணிகள் விதைத்திடடி வயலினிலே
வந்தவரெல்லாம் வயிறு நிறைந்து வாழ்த்திடட்டும் மங்கள வாயினிலே...

இங்கில்லை பிரிவு என்று முரசு கொட்டிடு திண்ணத்திலே
யாவரும் இந்திய பிள்ளைகள் என்று நிமிர் மார் தட்டிடு வீரத்திலே
கொஞ்சமும் அஞ்சுவது நிகழாது என்று முட்டிடு வானத்திலே
எங்கள் பிஞ்சுகள் கைகளிலும் வாளுண்டு நீதி கேட்பதிலே...

நஞ்சுள்ளத்தார் தலை கொய்திடு ஒரு வீச்சினிலே
நாளும் பல கலைகள் வளர்த்து களித்திடு காதல் பேச்சினிலே
கொண்டு செல்ல ஒன்றுமில்லை என்பதை பறை சாற்றிடு புவி மீதினிலே
ஏழை இங்கில்லை என்றாகிட யாவையும் பகிர்ந்திங்கு பங்கிடு நேர்மையிலே~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக