வியாழன், 18 பிப்ரவரி, 2016

ஏ குளத்து தாமரையே....


ஏ குளத்து தாமரையே
உன்ன நெனச்சு கண்ணு தூங்கலையே
ஏ பருத்தி பூ காடே
ஓ ஒருத்திக்கு நா குறும்பாடே

கல்வாழை பூவப் போல
காதல சொல்லிப் போன
தல காலு புரியாமத்தான்
வௌவாலா மாறிப்போனே
நெல்ல குத்தும் உலக்கையை போல
நெஞ்சுக் குழியில குதிக்கிறியே....

துள்ளிப் பாயும் நதியாட்டம் என
அள்ளிப் போன துவைக்கும் துணியாட்டம்
ஓடையில் உன் பெயர
ஓயாம நா எழுத
பெரும் கோடையில் நீர் கரைய தவிச்சேனே அது காணாம
கம்பு கதிரா நீ சிரிச்ச
சொம்பு கூலா எனக் குடிச்ச...

நம்மூரு திருவிழாவில் அம்மனா நீயும் வர
உன்னோட பக்தனான என்ன கண்டுக்காம ஏ நாத்தீகனான
தலை வாழை தோப்புக்குள்ள மறைவாக உன்ன பார்க்கையில
சரியாத தாவணிய சரி செஞ்ச அது ஞாயமில்ல
மொட்ட பனைய ஒடிச்ச
இரட்ட ஜடையில் என்ன மடிச்ச...

வயக்காட்டு வரப்பு மேல
ஊரும் ரயில் பூச்சிபோல
சுண்ணாம்பு கலக்காம பதநீரா நா ஆனே புள்ள
கிழக்கால போகும் வீட்டு பாதை மறந்து
வடக்கால மாறிப் போனதென்ன
உழுவும் மாடா நானிருக்க
அதில் விழும் கோடா நீயிருக்க...

ஏ.......
குளத்து தாமரையே
உன்ன நெனச்சு கண்ணு தூங்கலையே....


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக