ஞாயிறு, 10 மே, 2015

கனவது



கண்ட கனவது விதையாகி, வேர் விட்டு, இலையாகி, செடியாகி, படர் கிளையாகி, பூத்து, காய்த்து, பழமாகி, தொண்டையில் இறங்க உறங்காது காத்திருக்க ...

கொண்ட கோலமது உண்ண முடியாது போனதடி கோல மயிலே ;
நாம் வாழும் வாழ்கையானது கொண்டு போக ஒன்றுமில்லா சாம்பல் அல்லது சில அடி ஆழமடி ;

இதில் சொந்தமென்ன, பந்தமென்ன உயிர் உடல் விட்டு சுடுகாட்டில் வெந்து தணிந்த பின், சுயநலமும் சுயமும் சுகமும் வேறு கூட்டில் ஒலியும் மாயமென்னடி ;

மண்ணில் புழுத்துப்போகும் தேகமது இதற்கு பூரண அழகு ஏதடி; புத்திக்கு எட்டிய இது பூமியில் அடங்கும் வரை ஓய்வதில்லை; கத்தியே சொன்னாலும் ஆசையின் செவிட்டுக் காதினில் ஏறுவதில்லை ;

சத்தியமாய் சொல்லுகின்றேன் சாவதற்கு அச்சமில்லை; எவனாக இருப்பினும் எமனுக்கு பேதமில்லை; சுற்றும் இந்த பூமியிலே முற்றும் கற்றவர் ஒருவருமில்லை ஆதலால், தொற்றிய கவலையை தூற்றித் தொடர்ந்து பற்றிடுவாய் பாதகமற்ற பாதையை ;

பத்திரம் பத்திரம் மனப்பாத்திரம் அது நிறையா நிலையில்லா காத்திரமற்ற கோத்திரமடி ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக