ஞாயிறு, 10 மே, 2015

தனத்தந்தோம்

பூவினில் தேனாய் ஆடுகிறாய்
பூப் பந்தாய் துள்ளி ஓடுகிறாய்
பூலோகம் யாவும் நீ ஆகுகிறாய்
பூ மழையாய் என்னில் தூறுகிறாய் ;l

வானம் நிமிர்ந்து மேகம் பார்த்தால்
உந்தன் முகமாய் மாறுது ;
பூமி சாய்ந்து இமைகள் மறைத்தால்
உந்தன் ஞாபகம் கீறுது ;

பொய்யென ஆன பின்னும்
பெய்யெனப் பெய்ந்து - நெஞ்சம்
மெய்யென இனிக்குது
தனத்தந்தோம் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக