ஞாயிறு, 10 மே, 2015

சிற்றெறும்பென

சிற்றெறும்பென
சீரிய நரித்தனம் புரிகின்றாய்
கற்றுணர்ந்த கர்வமற்ற மனதிடம்
கள்ளத்தனம் செய்கின்றாய்
முற்றுணர்ந்தோனென

முட்டாள் ஆக நினைக்கின்றாய்
காலம் கற்பித்த பாடம் தனை மறந்து
காதினில் பூ சுத்துகின்றாய்
உழைப்பினை உணராது
ஊதியத்தில் ஊனமாகிறாய்
உண்மையினை உணராது
உன்பாட்டிற்கு உளறுகின்றாய்
இனியும் தப்பாட்டம் ஆடினால்
தப்பிடாது தலை மாட்டுவாய்
உன்னுடன் மழைக்கு மட்டுமே துள்ளியாடும்
தவளைகளை கூட்டு சேர்த்து நிச்சயம் பாம்புக்கு இரையாவாய் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக