ஞாயிறு, 10 மே, 2015

மேலோனே

உழைத்து இன்னும் உயரப் போகவில்லை என்று
சலித்து அயர்ந்திடாது நித்தமும் கலப்பை பிடித்து
நிலத்தில் கேள்விக்குறியாய் விரல்கள் காய்த்து
மலையென தேகம் கருத்து மழைக்காக காத்து
பிழையாவும் பொறுத்து நல் நெல் மணிகள் அறுத்து
பசியாற உணவளிக்க மேலாடை துறந்த மேலோனே
நின் உழைப்புக்கு ஈடாகுமோ இங்கு வேறேதுமே ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக