ஞாயிறு, 10 மே, 2015

வதை

வெள்ளைச் சுடரொன்று
வெட்ட வெளி வீதியிலே உலவுகிறது
கொள்ளை அழகுண்டு
கோபத்திலே தனித்து முகம் திருப்பியிருக்க - அன்பு
இல்லையென நம்புவதற்கில்லை

இரவு முழுவதும் விழித்திருக்கு - மிகு
ஏழை என்னை வெகு தூரத்திலிருந்து
வேதனை செய்திடலாகாது -ஒரு
கள்வனைப் போல்
ஓர் நாள் காணாது ஒளிந்திருக்க
முள் அதனை விழியெல்லாம்
சொருகியதாய் வலியெடுக்க
சொல் உடனே
என்மீதுண்டானக் காதலை
இல்லையெனை எப்பொழுதும்
நின் எல்லையில் நின்றே வதை~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக