
தேடிக்கொண்டிருக்கின்றேன் பகிர்ந்திட நின் ஒற்றை விரலை
எல்லா ஒளியும் கதவடைத்துக் காணாமல் இருளாகையில்
கனவுகளின் தையல் பிரித்து பூப் பறித்து சூடிக்கொள்வது நீதான்
வெறுமையாகும் இருப்பை எப்போதும் நம்புவதில்லை
சூழ்நிலை சுத்தியல் ஆனால் என்ன என் நாற்புறமும் நீயே
நிலைதடுமாறும் வாசலில் அமர்ந்திருந்து அழுதிருக்க
விலையற்ற அன்பை தோள் அணைத்து அள்ளிக் கொடுப்பாய்
சில்லரை சூடிக்கொள்ளும் கல்லறை என்று கதறியபோது
கண்ணாடிச் சில்லென உடையாது சிதராமல் சிரிக்க வைப்பாய்
தடையங்கள் தொலைத்து தொலைதூரம் தனித்தொரு பயணம்
தடங்கள் பார்த்து அருகில் வந்து தலைகோதுதல் தனி சுகம்
பொய் என யாவும் கடந்தேபோகும் புறமது வாழ்வு
மெய் என நாளும் கலந்தே இருப்போம் அகமது நாமே ~~~
- வித்யாசன்
சூழ்நிலை சுத்தியல் ஆனால் என்ன என் நாற்புறமும் நீயே
நிலைதடுமாறும் வாசலில் அமர்ந்திருந்து அழுதிருக்க
விலையற்ற அன்பை தோள் அணைத்து அள்ளிக் கொடுப்பாய்
சில்லரை சூடிக்கொள்ளும் கல்லறை என்று கதறியபோது
கண்ணாடிச் சில்லென உடையாது சிதராமல் சிரிக்க வைப்பாய்
தடையங்கள் தொலைத்து தொலைதூரம் தனித்தொரு பயணம்
தடங்கள் பார்த்து அருகில் வந்து தலைகோதுதல் தனி சுகம்
பொய் என யாவும் கடந்தேபோகும் புறமது வாழ்வு
மெய் என நாளும் கலந்தே இருப்போம் அகமது நாமே ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக