ஞாயிறு, 10 மே, 2015

அகமது நாமே

கை நிறைய வலிகள் நில்லாது வழிந்தோடுகிறது
தேடிக்கொண்டிருக்கின்றேன் பகிர்ந்திட நின் ஒற்றை விரலை


எல்லா ஒளியும் கதவடைத்துக் காணாமல் இருளாகையில்
கனவுகளின் தையல் பிரித்து பூப் பறித்து சூடிக்கொள்வது நீதான்


வெறுமையாகும் இருப்பை எப்போதும் நம்புவதில்லை
சூழ்நிலை சுத்தியல் ஆனால் என்ன என் நாற்புறமும் நீயே


நிலைதடுமாறும் வாசலில் அமர்ந்திருந்து அழுதிருக்க
விலையற்ற அன்பை தோள் அணைத்து அள்ளிக் கொடுப்பாய்


சில்லரை சூடிக்கொள்ளும் கல்லறை என்று கதறியபோது
கண்ணாடிச் சில்லென உடையாது சிதராமல் சிரிக்க வைப்பாய்


தடையங்கள் தொலைத்து தொலைதூரம் தனித்தொரு பயணம்
தடங்கள் பார்த்து அருகில் வந்து தலைகோதுதல் தனி சுகம்


பொய் என யாவும் கடந்தேபோகும் புறமது வாழ்வு
மெய் என நாளும் கலந்தே இருப்போம் அகமது நாமே ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக