வியாழன், 25 ஜூன், 2015

ஏதுமுண்டோ

என் எழுத்து என்று தனித்து
ஏதுமுண்டோ
நின்னகத்தே காதல் கொண்டே யாவும் பிறந்ததிங்கே
பின் தேடியும் பிரிவினைக் கிடைப்பதுண்டோ
தன்னகத்தென்று சொல்வது தகா தவறிங்கே
முன்னகத்து முகர்ந்து மூர்ச்சையாகுவதுண்டோ
பெண் மனது பித்தென்று மறைந்தாய் அறிந்திங்கே
எண்ணகத்தில் எனைவிடுத்து வேறு யாருமுண்டோ
விரைந்திங்கு நேர்கொண்டு சொல்லடா கண்ணா
வேதனை தாராது பேதையை தோளினில் தாங்கடா ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக