வியாழன், 25 ஜூன், 2015

சுடு... சுடு...

பெருத்த பலமானவன்
பகுதறிவுப் பாவலன்
கனமற்றக் கலைஞன் ;

நிகழும் போரினிலே
ஒவ்வொரு குண்டாய்
ஒரு சேர உடைத்தான் ;

கையிலிருப்பதோ கடைசி...
நடுக்கமில்லை
சுடு... சுடு...

துளைக்கும் தோட்டாவில்
சத்தமற்றுச் சாகப்போவது
முன்னவன் போல்
ஓர் பாமரன்தான்

சுடு... சுடு...

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக