வியாழன், 25 ஜூன், 2015

காதல் கண்ணனுக்கு

அழகிய அதிகாலை தாள் பணிந்து
வாடா வண்ண மலர் கொய்து
விரல் படா இதழ் நாரெடுத்து
வாசம் மாறா சரம் தொடுத்து
கட்டிவைத்தேன் பா மாலை ஒன்று
அனுதினமும் கருத்தினில் சூடி ஆடி மகிழ்ந்திட
எம் காதல் கண்ணனுக்கு என்று ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக