வியாழன், 25 ஜூன், 2015

மடல் காகிதமாய்

வான் பார்த்த மழையாய்
நீ வந்தாய் சுகமாய்
இருள் சேர்த்த நிலவாய்
நீ இருந்தாய் துணையாய் ;

ரயில் ஜன்னலாய்
என் அருகினில் அமர்ந்தாய்
குளிர் போர்வையாய்
என் உடலினில் இணைந்தாய் ;

கடல் சங்கொலியாய்
காதினில் நிறைந்தாய்
மடல் காகிதமாய்
மனதினில் பதிந்தாய் ;

எனக்குள்ளே நான் இல்லையடி பெண்னே
தனக்குள்ளே பேசிடும் இன்பம் தந்தவள் நீதானே ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக