வியாழன், 4 ஜூன், 2015

** தோழி **


எங்கே போய் மறைந்தான் தோழி
இங்கே காதல் நோய் பெருகுதடி தோழி
கண்ணில் கருவளை விழுவதேனடி தோழி
காணாது இரவுகள் கொடுவாளாவதேன் தோழி ;


எண்ணி எண்ணி நினைவு மெலிந்ததடி தோழி
மண்ணில் வீழ்ந்த கண்ணீர் கடலானதடி தோழி
தூது சொல்லிடத் தென்றல் துணையில்லையடி தோழி
தூக்கத்திலும் மார் சாய்ந்திட கனவு துழாவுதடி தோழி ;


நாட்கள் ஏக்கத்திலே கரைதல் ஞாயமில்லையடி தோழி
பூக்கள் பார்க்கையிலே அது ஏளனம் செய்யுதடி தோழி
கை சேர்த்தல் பிரிப்பதிங்கு தூரம் பெரும் துயரமடி தோழி
பிறிதொரு இன்பம் சூழ்ந்திப்பினும் அது சுகமில்லையடி தோழி ;


முகம் பாராது நிதம் படும்பாடு நீ எடுத்துக் கூறடி தோழி
பாவலன் எழுதா ஏடிங்கு பாலாய் போவதையும் சொல்லடி தோழி
நேசத்தை வைத்தேன் வேறென்ன தீங்கிழைத்தேன் தோழி
எந்நேரமும் அருகினில் அவனது வாசமது போதுமடி தோழி ;


அஃதில்லையேல் இவ்வாழ்வது மரணமடி தோழி ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக