செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

நீயும்

தனிமையின் நடைபாதையில்
உன் நினைவோடு உரையாடல்

கூட்டத்தின் மத்தியில்
உன் கனவுகளோடு தேடல்

சொல்லி கொண்டு வருவதில்லை
மழையைப் போல் நீயும்

தீண்டுவது தென்படுவதில்லை
காற்றை போல் உன் பார்வை

என் பக்கத்தில் வரும்போது எல்லாம்
ஏதோ பேசுவாய் உனக்கே புரியாததாய்

அடிக்கடி ரசிப்பதுண்டு
நீ நின்று சென்ற தெருக்களை

வீட்டு வாசலை கடக்கும் நேரத்தில்
உன் வாசம் நுகர்வதுண்டு !!

மு.வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக