நீ படிக்க கவிதையானது
என்னிடமிருந்த பேனா
நீ எழுதியதும் மயிலிறகானது
வகுப்பறை மர நாற்காலி
நீ அமர நினைவுச் சின்னமானது
என்னிடமிருந்த பேனா
நீ எழுதியதும் மயிலிறகானது
வகுப்பறை மர நாற்காலி
நீ அமர நினைவுச் சின்னமானது
மதிய உணவு இடைவேளை
நீ இருக்க எனக்கு சுற்றுலாவானது
சிறப்பு வகுப்பறை
நீ இருக்க பண்டிகை தினமானது
பல வருட கரும்பலகை
நீ எழுத வண்ண திரையரங்கானது
முதல் முறையாக
விடுமுறை நாட்கள் எல்லாம் அனாதையானது
நீ இல்லாததால் !!


மு.வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக