செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

நீ இல்லாததால்



நீ படிக்க கவிதையானது

என்னிடமிருந்த பேனா
நீ எழுதியதும் மயிலிறகானது

வகுப்பறை மர நாற்காலி
நீ அமர நினைவுச் சின்னமானது

மதிய உணவு இடைவேளை
நீ இருக்க எனக்கு சுற்றுலாவானது

சிறப்பு வகுப்பறை
நீ இருக்க பண்டிகை தினமானது

பல வருட கரும்பலகை
நீ எழுத வண்ண திரையரங்கானது

முதல் முறையாக
விடுமுறை நாட்கள் எல்லாம் அனாதையானது

நீ இல்லாததால் !!






மு.வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக