சொல்லி, சொல்லி
சுவைக்க கூடிய சுவை
அள்ளி, அள்ளி
பருக கூடிய பானம்
இதிகாச கதைகளின்
அச்சாணி
இனம், மதம், ஊனம்
தாண்டிய உன்னதம்
உணர்வுகளை நெய்யும்
ஆயுதம்
உருவமில்லாது உலவும்
அற்புதம்
மூடனையும் கவிஞனாக்கும்
முள்ளையும் ரசிக்க வைக்கும்
பட்டாம் பூச்சி முதல்
தூசு வரை நுழைந்து பார்க்கும்
நூலாம்படையில் கூட
நூலகம் தேடி பிடிக்கும்
அறவியல் கண்டுபிடிக்க
முடியாத அதிசியம்
ஆதாம், ஏவாலின்
ஆதி ரகசியம்
காதலை..
எழுதிவிட்டனர்
கவிஞர்கள் கோடி...
ஒவ்வொரு நிமிடமும்
கவிஞர்களை கருதரிக்கிறது
காதல்
உடலுறவின்றி !!
மு.வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக