செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

நமக்கு மட்டும் புரிந்த ஒன்று

எப்பொழுதும் உன்னோடு இருக்கவே
ஆசைப்படுகிறது என் பயணம்


உன் மடிமீது துயில் கொள்ளவே
பிரியப்படுகிறது என் இமைகள்

உனக்குள் புதைந்து புதுப் புது
பிறவி எடுக்க தவிக்கிறது என் மனது


உன்னை தீண்டும் தென்றலையும்
தடைவிதிக்க நினைக்கிறது என் கனவு


உன்னோடு கழியும் பொழுதுகளை
மட்டும் அனுமதிக்கிறது என் காலம்


இந்த உலகத்தில்
நீயும். நானுமாக வாழ்வதையே
எதிர்பார்க்கிறது என் உலகம்


யாருக்கும் சொல்லி புரியவைக்க முடியாத
நேசம் என்னோடது என்று நமக்கு
மட்டும் புரிந்த ஒன்று !!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக