செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

அந்த நிமிடம்

அந்த நிமிடத்தில்தான்
எனது பயணம்


அந்த கணத்தில்தான்
எனது கவனம்

மாறிபோனது பாதைகள்
ஆயிரம்


இன்னும் மறையவில்லை
அந்த காலம்

நரை விழுந்து தளர்ந்த
பின்னும்

நுரையீரல் கரையில் வீசுகிறது
வசந்தமாக உனது நினைவலை

கல்லரைக்கு நாட்களை
எண்ணிக் கொண்டிருக்கும் தருணம்

இப்பொழுதும்
நீயும் நானும் கைகோர்த்து
நடந்து சென்ற பாதைகளை பார்த்து
இளைப்பாறுது எந்தன் மனம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக