திங்கள், 30 நவம்பர், 2015

இது என்ன நேசமடா

இது என்ன நேசமடா
எங்கும் மோசமடா
பொய்மை பேசுதடா
யாவும் வெறும் வேசமடா ...


மிகு ஏழை என்பாரடா
நிதம் ஏசிப் பழிப்பாரடா
பலவீனன் என்பாரடா
பயமுடையோ ரென எள்ளி நகைப்பாரடா...

நம்பிக்கை நாசம் செய்வாரடா
மன நஞ்சை நெஞ்சில் விதைப்பாரடா
நல்லவன் போல் நாளும் நடிப்பாரடா
நாடகம் முடிந்ததும் நாணயம் இழப்பாரடா ...


நாயென குரைப்பாரடா
அதுவுமல்ல நன்றி மறப்பாரடா
பேயென ரத்தம் குடிப்பாரடா
பேதமை மறைத்தே ஓரினமென்பாரடா ...


மெய் மானம் இல்லாரடா
செய் உதவி மறைப்பாரடா
பெரும் மேலோன் என்பாரடா
சுய பெருமை பேசியே பொழுதழிப்பாரடா ...


மிகு கோவம் கொள்வாரடா
கொடு மிருகம் விட தாழ்வாரடா
யானே பலமுடையோன் என்பாரடா
பாவம் அவரே பழமானபின் தடுமாறி வீழ்வாரடா ...


யாதும் அறிந்தவனென் பாரடா
எப்போது வருவான் எமன் என்பதை அறியாரடா
சூது பகை மாது மது மதி இழப்பாரடா
ரத்தம் சுண்டியபின் சுருண்டே கிடப்பாரடா ...


கொண்ட கோலம் பணமென்பாரடா
கோ மகனென்று முரசு கொட்டுவாரடா
யாவும் என்னால் முடியும் என்பாரடா
முடிந்து போகும் போது கோவணமின்றி எரிவாரடா~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக