திங்கள், 30 நவம்பர், 2015

கூடாதோர் கூட்டத்தில்

கூடாதோர் கூட்டத்தில் கூடினால்
கோடான கேடெல்லாம் தேடிவரும்
படாதபாடு பட்டுணர்ந்த பின்னும்
அவர்தம் இழிசெயல் உரைத்து நொந்தால்
இருக்கின்ற நிம்மதியும் கெடும்
அதுமீறி பெரும் கோபம் கொண்டால்
கொலை பாதகச் செயலது விளையும்
ஆகவே விட்டொழிந்தது கர்மமென்று
தூர விலகிடு துஷ்டனைக் கண்டு
நற்செயல் புரிய இங்கிடம் பலவுண்டு
அது நாடி செல்
நாளும் பெருநிம்மதி அங்குண்டு~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக