திங்கள், 30 நவம்பர், 2015

தீபாவ(லி)ளி

ஒரு நரகாசுரனை கொன்றதற்கு 
ஓராயிரம் நரகாசுரனுடன் கொண்டாடும் திருவிழா...

சிவகாசி பட்டாசு ஆலையில் கருகிய உடலை மறந்துவிட்டு
தெருவெங்கும் வேட்டு சப்தம் சிதறவிழும் காகித பண்டிகை...


விடிய விடிய துடிதுடிக்க கணக்கற்ற மிருக கழுத்தறுபட்டு
வெந்து, வறுத்து தின்று ஜீரணிக்கும் வேதனையற்ற பெரு விழா...


பழைய ஆடை யார் தருவார் என்று ஏங்கும் குழந்தைகளுக்கு மத்தியில் புதுத் துணி பல உடுத்தி புன்னகைக்கும் புதுநாள்...

ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் வக்கற்ற ஏழ்மைக்கு காரணம் எண்ணாது பலகாரம் ருசிக்கும் பரிவற்ற சந்தோச பொழுது...

ஒலியில் சியர்ஸ் பருகி மதுவில் வாழ்வை தொலைத்துவிட்டு மகிழ்ச்சியை பறைசாற்றும் இருள் சூழ்ந்த ஒளி வெள்ளமிது...

உறவுகளை மறந்து உள்ளங்கையில் மிதந்து சமூக வளைதளத்தில் வாழ்த்துக்களை பகிரும் கலிகால தீபாவளியிது...

என்ன செய்வது ?
தீபாவ(லி)ளி வாழ்த்துக்கள்~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக