திங்கள், 30 நவம்பர், 2015

கேட்காம தலை ஆட்டுற

நீ என்ன செஞ்ச ஏ மனச
நா உன்ன சுத்தும் நிழலாக ;
கண்ணுக்குள்ள தூக்கமில்ல
கடுக கூட தூக்க முடியவில்ல;
பறந்த ஏ வானம்
சுருங்கிதான் போச்சு
கிழிஞ்ச துணியாக
பேச்சு ஆச்சு
இன்னும் என்ன சொல்ல
காரணம் ஏதும் புரியவில்லை...


கிளையில் ஆடும் இலையா போனேன்
தரையில் கிடந்து அழுகும் குழந்தையா ஆனேன்
தனியா பேசத் தானே
நிலவ அழைச்சேன்
கவிதை ஒன்னு எழுதி பார்த்து அத நான் கிழிச்சேன்
உள்ளம் போகும் பாதை எல்லாம்
உன்ன மட்டும் தானே இறக்காம உசுருக்குள்ள சுமந்தேன் ...


காக்கா பொட்டு சிகுனா ஒட்டி கண்ணாடி ரசிச்சேன்
ஓ பெயர எழுத்தத் தானே கை முழுக்க மருதாணி வச்சேன்
அடங்கா அலை போல
வந்து விழுகிற ஏ மேல
தர முடியா கடன் போல
நினப்பத்தான் துரத்துற
மடங்கும் ஆடைக்குள் விரலா நுழைஞ்சு பாக்குற
உரலில் இடிக்கும் புது நெல்லா என்ன பார்த்தா குதிக்கிற...


அதிகாலை போர்வை போல
அகலாம நீ இருக்க
சதிகாரன்னு ஒன்ன சொன்னா
சலிக்காம நீ சிரிக்க
மடியில் படுத்து
மனச கெடுத்து
நீ வலிக்காம இதழ் மூடுற
வழிய மறித்து
வம்பு இழுத்து
வரப்பு நீராக வளச்சு என்ன பிடிக்குற....


போடானு நா சொன்னா வாடித்தான் நீ போகுற
வாடானு நா சொன்ன ஏனென்னு கேட்காம தலை ஆட்டுற~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக