திங்கள், 30 நவம்பர், 2015

தூண்டில் புழுவா தொங்கவிட்ட

காட்டு நிலவா
அவ பாட்டுக்கு வந்தா
ரோட்டு கடையா இருந்த மனசில்
புது நோட்டு மழையா பொழிஞ்சு போனா
அவ முன்னால நான் சிறு பொம்மையா ஆனேனே
உண்மையாவே நான் பொய்யாகிப் போனேனே...


எழுத்து கூட்டி ஒரு வார்த்தை படிக்க எனக்கு தெரியாது
இப்ப...
அவ பெயரும் ஏ பெயரும் சேர்த்தா கவிதையினு சொல்லுது ஊரு
ஒதுங்கும் மீசை
ஒரக் கண்ணில் பதுங்குது
சீவி எடுத்த நொங்கு போல
இதயம் வெளிய தூங்குது...


பனை மரத்தபோல வளந்துபுட்டேன்
நிழல் கொடுக்க தெரியாது
இப்ப...
ஆலம் விழுதா மாறிபுட்டேன்
நீ ஊஞ்சலாட வருவது எப்போது
தாறுமாற பேசிய நானும்
தானா ஊமை ஆகிட்டேன்
சண்டியருனு சுத்துன நானும்
சாதுவாகி சாமிய தூக்கிட்டேன்...


கோடாரி நெஞ்சுக்குள்ள
கோழிக் குஞ்சு சத்தம் கேட்குது
ஊதாரினு சொன்ன வாயி
மகா ராசானு சுத்தி போடுது
கத்தி பிடிச்ச கையிது
ஒரு பூவ பறிக்க யோசிக்குது
இரட்ட விழி சிவக்க வரும் கோவமது
பச்ச பிள்ளையாட்டம் பார்த்து சிரிக்குது....


நீ...
ஏன்டீ என்ன மாத்திப்புட்ட
தூண்டில் புழுவா தொங்கவிட்ட ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக