திங்கள், 30 நவம்பர், 2015

என் காதலது மிகுதியாலே

வானது சூல் கொண்டு
பெரு வயிறு வளர்கிறது
மேகமது மேவி படர்ந்து
பேருகால தடமாகிறது
வெண் பாலது சுரந்து
மெல் மார்பது இளகுகிறது
இதனை யாரேனும் காணுவாரென்று
கார் முன்றானை ஊடே ஒளிகிறது
என் காதலது மிகுதியாலே
கண்முன் காட்சியாய் ஒளிர்கிறது~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக