தனக்கென கூட்டம் அமைப்பார்
அதற்கு தானே தலைவனென தம்பட்டம் அடிப்பார்
மனதில் உள்ளதை மன்றத்தில் வைப்பார்
அதுவே மன்னவன் முடிவென ஆணையிடுவார் ;
அதற்கு தானே தலைவனென தம்பட்டம் அடிப்பார்
மனதில் உள்ளதை மன்றத்தில் வைப்பார்
அதுவே மன்னவன் முடிவென ஆணையிடுவார் ;
நிமிடம் ஒருமுறை முடிவெடுப்பார்
வாழ்வின் நிதர்சனம் இதுவென பொய்யுரைப்பார்
நாளும் உழைப்போரை நைய்ய புடைப்பார்
வெறும் வாயில் ஓதுவோருக்கு பொருள் வாரிக் கொடுப்பார் ;
தானும் ஏழை சாதி என்பார்
யாவரும் சரிசமமென்பார்
நீதி கதைகள் பல உரைப்பார்
நித்தமும் பல வேசமிட்டு நமை ஏய்ப்பார்;
ஏடுகள் பல கற்று கேடுகள் பல புரிவார்
ஏழையர் வாடிடும் நிலையறியாது ஏன் முடியாது என்றுரைப்பார்
நாளும் நிகழாததை நாளை நடக்குமென நம்பிக்கை வளர்ப்பார்
அதில் நல்ல பொழுதையெல்லாம் நாசம் செய்வார் ;
காவி அணிந்தவராய் ஆசை இல்லையென்பார்
கடை வீதிபோகாததை நல் பொருள் என்பார்
புத்தியில் ஒன்றை வைத்துக் கொண்டு பத்துவிதம் செய்வார்
அது புற்றாய் வளராது புதைகுழியானால் மற்றவரை பழிப்பார் ;
எட்டாக் கனி என்றபோதும் அது எனதென்பார்
தான் ஒரு முட்டாளா என யாவரையும் குற்றம் வுரைப்பார்
புண் பட்டபோதும் அதற்கு மருந்திடாது மறந்திடு என்பார்
வெண் சங்கு சுட்டாலும் நிறம் மாறுமா என சபதமிடுவார் ;
கெட்டாலும் காரணம் நானல்ல அது நின்னதால் என்பார்
விடுபட்டோர் காரணமறியாது வீழ்ந்தும் வீரம் பேசுவார்
சுமை தாங்காத மாடுகளையே சாட்டையால் சூழற்றுவார்
நிலை மாறாத போதனைகள் கூறுவோரை சாடுவார் ;
கண் மூடிக் கொண்டு வெளிச்சம் பக்கம் என்பார்
கடவுளை கை நீட்டி கானல் நீரில் மீன் பிடிப்பார்
கையாலாகதவர் கைத்தலம் பற்றி கரை சேருவேனென்பார்
இன்று வழியும் கண்ணீரை துடைக்காது நாளை கனவு பலிக்குமென்பார் ;
இப்படியே
பல காலத்தை கடந்தார்
இதை பார்த்தே பலனின்றி உழைத்தோர் நொந்தார்
நம்பிக்கை இழந்தும் வேறு வழியில்லாது வாழ்வை இழந்தார்
நாமெப்போது முன்னேற
நம் நாடெப்போது முன்னேற ?
- வித்யாசன்
வாழ்வின் நிதர்சனம் இதுவென பொய்யுரைப்பார்
நாளும் உழைப்போரை நைய்ய புடைப்பார்
வெறும் வாயில் ஓதுவோருக்கு பொருள் வாரிக் கொடுப்பார் ;
தானும் ஏழை சாதி என்பார்
யாவரும் சரிசமமென்பார்
நீதி கதைகள் பல உரைப்பார்
நித்தமும் பல வேசமிட்டு நமை ஏய்ப்பார்;
ஏடுகள் பல கற்று கேடுகள் பல புரிவார்
ஏழையர் வாடிடும் நிலையறியாது ஏன் முடியாது என்றுரைப்பார்
நாளும் நிகழாததை நாளை நடக்குமென நம்பிக்கை வளர்ப்பார்
அதில் நல்ல பொழுதையெல்லாம் நாசம் செய்வார் ;
காவி அணிந்தவராய் ஆசை இல்லையென்பார்
கடை வீதிபோகாததை நல் பொருள் என்பார்
புத்தியில் ஒன்றை வைத்துக் கொண்டு பத்துவிதம் செய்வார்
அது புற்றாய் வளராது புதைகுழியானால் மற்றவரை பழிப்பார் ;
எட்டாக் கனி என்றபோதும் அது எனதென்பார்
தான் ஒரு முட்டாளா என யாவரையும் குற்றம் வுரைப்பார்
புண் பட்டபோதும் அதற்கு மருந்திடாது மறந்திடு என்பார்
வெண் சங்கு சுட்டாலும் நிறம் மாறுமா என சபதமிடுவார் ;
கெட்டாலும் காரணம் நானல்ல அது நின்னதால் என்பார்
விடுபட்டோர் காரணமறியாது வீழ்ந்தும் வீரம் பேசுவார்
சுமை தாங்காத மாடுகளையே சாட்டையால் சூழற்றுவார்
நிலை மாறாத போதனைகள் கூறுவோரை சாடுவார் ;
கண் மூடிக் கொண்டு வெளிச்சம் பக்கம் என்பார்
கடவுளை கை நீட்டி கானல் நீரில் மீன் பிடிப்பார்
கையாலாகதவர் கைத்தலம் பற்றி கரை சேருவேனென்பார்
இன்று வழியும் கண்ணீரை துடைக்காது நாளை கனவு பலிக்குமென்பார் ;
இப்படியே
பல காலத்தை கடந்தார்
இதை பார்த்தே பலனின்றி உழைத்தோர் நொந்தார்
நம்பிக்கை இழந்தும் வேறு வழியில்லாது வாழ்வை இழந்தார்
நாமெப்போது முன்னேற
நம் நாடெப்போது முன்னேற ?
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக