திங்கள், 30 நவம்பர், 2015

பாப்பா

முழு சுதந்திரம் வேணுமடி பாப்பா
அதில் மூழ்கி சுகம் காண வேணுமடி பாப்பா
அடிமை இனத்தவர் நீங்க வேணுமடி பாப்பா
நாமனைவரும் சமமென்று நீ உரைக்க வேணுமடி பாப்பா ;


கொடுமை, மடமை ஓடி ஒழிய வேணுமடி பாப்பா
மண்ணில் எதற்கும் நாம் குறைந்தவரில்லை என்று கொட்டடி பாப்பா
சாதி, மதம் ஏதுமில்லையடி பாப்பா
அது உண்மையாகிட கல்விச் சாலையிலே அதை நீக்கிட வேணுமடி பாப்பா ;


நீதி நிலைத்திட வேணுமடி பாப்பா
அதற்கு நீ நித்தமும் சத்தியம் உரைத்திடடி பாப்பா
பாவங்கள் நிகழ்வதைக் கண்டு பயந்திடாதே பாப்பா
பார்வையில் வீரம் கொண்டு புது உலகை படைத்திடு பாப்பா;


யாவரும் கூறிடும் வார்த்தையினை உடனே நம்பிவிடாதே பாப்பா
அதில் நல்லவை, தீயவை யாதென கண்டுணர வேணுமடி பாப்பா
வீண் பிடிவாதங்கள் என்றும் கூடாதடி பாப்பா
வெறும் அனுமானத்தில் எதையும் உறுதி செய்தலாகுது பாப்பா ;


அதட்டுச் சொல்லுக்கு ஒருபோதும் அஞ்சிடாதே பாப்பா
அது எமனென்றாகினும் எதிர்த்து நின்றிடு பாப்பா
வஞ்சகர் வழியினில் வந்தால் நெஞ்சு நிமிர்த்திடு பாப்பா
அவர்தம் வார்த்தைகளில் மயங்கிடாது நேர் நடை போட்டிடு பாப்பா ;


நம் பண்பாடு, பரம்பரைத் தொழில் ஏரினை மறந்திடாதே பாப்பா
பெரும் பஞ்சம் வந்தபோதும் அண்டி கை தொழுதிடாதே பாப்பா
எங்கும் நீ சென்றபோதும் தரம் மங்கிடாதே பாப்பா
பாரெங்கும் வியக்கும்படி நம் பாரத புகழ் பேச வேணுமடி பாப்பா ;


இல்லையென்று இங்கு ஏதுமில்லையடி பாப்பா
தொல்லை செய்வோரை வேரோடு சாய்த்திடு பாப்பா
கொள்ளை அழகது மயங்கிட புன்னகை சிந்திடு பாப்பா
கொள்ளையர்களை குறைகூறாதே கொலை செய்திடு பாப்பா ;


கொஞ்சும் தமிழினை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்றிடாதே பாப்பா
அந்நியர் விட்டுச் சென்றதை அனைத்தையும் தீயிலிடு பாப்பா
கொஞ்சும் மொழியினில் கவிதை சமைத்திடு பாப்பா
நமை மிஞ்சியவர் இங்கு எவருமில்லையென கர்வம் கொண்டிடு பாப்பா ;


இதனை என்றும் மனதினில் இறுத்திடு பாப்பா
இதை எவர் பொய்யென்று கூறினும் அவரைக் கொன்றிடு பாப்பா~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக