ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

எப்போதெல்லாம் நீ
பார்க்கிறாயோ
அப்போதெல்லாம் நான்
பூக்கிறேன்

ஒரு நிமிடம்
நீ பார்த்தால் போதும்
ஒவ்வொரு நிமிடமும்
அது வருடும்

நீ
உயர பார்க்காதே
பறவைகள்
தற்கொலை செய்து கொள்ளும்

நீ
நிமிர்ந்து பார்க்காதே
நிலா
தேய்ந்துவிடும்

எப்படிச் சொல்வது
உன் இரு விழி
என் வழியானதை

இதழ்கள் சிப்பது தெரியும்
விழிகள் சிரிப்பது அதிசயம்

குளம் இல்லை...
எப்படி பூத்தது ?
இலையின் நடுவில்
சிகப்பு தாமரை

இப்படி பார்க்காதே
இதயம் இடம் மாறுகிறது...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக