ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

எப்போதும் தொலைந்தவனாய் நான்
தொலைவினில் நீ...

இப்போதும் கடல்நடுவில் நான்
கரையோரத்தில் நீ...

மறந்திருக்க முடியாத நிலையில் நான்
மாற்றிக்கொள்ள இயலாத நிலையில் நீ...

இழக்க நினைக்காத இடத்தில் நான்
ஏற்க முடியாத வகையில் நீ...

பிரிதல் வந்தும் பிரியாது நான்
புரிதல் தந்து விலகியது நீ...

மரணம் வருவது எப்போதென்று நான்
மறுபடியும் பிறப்போம் என்றாய் நீ...

உலகம் தாண்டியதாய் என் வாழ்க்கை
உடையாது ஒருபோதும் உன் சேர்க்கை

முடியாது என்று யார் கூறினும்
நினைவுக்கு யார் விதிக்க கூடும் தடை !!!

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக