ஞாயிறு, 26 ஏப்ரல், 2015


இளையராஜாவுக்கு பரிசு


இளைய ராஜா-வின் காதலர்களில் நானும் ஒருவன்...

அவருக்காக பாடல் ஒன்றை ஒரு நடு இரவில் மனதில் எழுதினேன்
நேரில் தர இது வரை வாய்ப்பில்லை.

ஆதலால்...

இன்று அவரது 70 வயதில் பிறந்த நாள் பரிசாகத் தருகின்றேன்.
எண்ணற்ற இதய தளத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
இளையராஜாவுக்கு
இணைய தளத்தில்...!!

...............................
இதோ அந்த பாடல்
..............................

நான் போகும் பாதை எங்கே யாருக்கும் தெரியாது
நான் போகும் பயணம் எங்கே எவருக்கும் புரியாது
போகாத பாதை எல்லாம் போவோமே எல்லோரும்
புரியாத திசைகள் எல்லாம் அலைவோமே தினந்தோறும்
ஆஹாயம் போலே வாழ்க்கை தானடா
ஆதாரம் இல்லை வாழ்வில் ஏனடா...

என்னுலகம் எதுவென்று நான்சொல்லக் கூடுமோ
எனக்கெது வந்தாலும் அது என் தாய்க்கு ஈடாகுமோ;
மண்ணுலகம் கண்டதெல்லாம் மாயமென்று ஆகுமோ
எண்ணிலிருந்து வந்ததெல்லாம் ஈசனது நாடகமோ;

(நான் போகும் பாதை எங்கே ....)

கடலை தேடும் நதியாக - நான்
இசையைத் தேடுகிறேன் நிதம் காற்றாக;
ஓயும் இந்த வாழ்கையில் - என்றும்
ஓய்வதில்லை எந்தன் எண்ணலைகள்;

(நான் போகும் பாதை எங்கே ....)

கண்ணுறக்கம் என்பது எண்ணுறக்கமில்லையே
நான் காணும் காட்சியாவும் என் மனசாட்சியே;
வான் புகழானாலும் தான் என வாராதே
நான் படைத்த படைப்பெல்லாம் இறையருளானதே;

(நான் போகும் பாதை எங்கே ....)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக