ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

மரணம் ( June 12 - 2013)

(இன்று எனது அலுவலக நண்பரின் தந்தை மரணம். அந்த தருணம்.)

அழுகையின் சப்தங்களில்
அதிரும் உணர்வுகள்

விழிகளின் நீர் பிசுபிசுப்பில்
உருண்டோடும் நினைவுகள்

கதறும் உதடுகளின் வார்தைகளில்
முகம் தேடும் ஏக்கங்கள்

எரிந்த பின்னும் கரைந்த திரியாய்- நீ
உருகி வழியும் மெழுகாய்-நான்

கடைசி நகர்தலில் நாலாக
பல நாள் கலந்தது நீயும்- நானுமாக

அருகருகில் இருந்தும் தொலைதூரமாய்
மறுபடியும் பேசியதாய் அந்த சில வார்த்தைகள்

தெருவெங்கும் வெறும் உடலாய் நீ
உயிருந்தும் நடந்தேன் சடலமாய் நான்

உறவை படைத்து உயிரை பிரித்த
உலகம் அறியா விந்தையாய்

எனக்கான உன் முகத்தை மறப்பேனோ
மீண்டும் விழிகள் தடவியது
கடைசி பார்வை ...

கண்ணீராய்...!!

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக