ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

சாகும் வரை நினை
நிலவு தேயும் வரை அலை

மெளனித்தே மரித்து போ
சில நிமிடங்களில் நிலைத்து வா

கவிதையாய் கட்டிப் பிடி
கண்ணீராய் கொட்டி விடு

அவ்வப்போது விலகு
முப்பொழுதும் உருகு

முன் நிகழ்ந்ததை அசைபோடு
விதியோட சமாதானம் தேடு

காற்றோடு நித்தமும் வாடு
கனவுக்குள்ளே வாழ்ந்திடு

சேர்ந்தது அழகிய நிமிடத்தோடு
பிரிந்தது யாருக்கும் புரியாத உணர்வோடு

மறவாது மறந்தேன் காலத்தோடு
தனியாகும்வேளையில் தாகத்தோடு

பிரிவுக்கு காரணம் அறியாது
அறிந்திருந்தால் நம்மில் பிரிவேது

மீண்டும் எப்போது சந்திப்பு ஏக்கத்தோடு
நிகழாதென்றிருந்தும் நிகழாதா என்கிறது மனம்

எனக்கு...
இங்கே
இன்றும்
இப்படித்தான்

உனக்கு...
அங்கே
என்றும்
இப்படித்தான்

அறிவேன்
அறிவேன்
ஆதலால்தான்
அழுகிறேன்
கண்ணீர் இன்றி...!!!

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக