ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

தந்துவிடு

யாரிடம் நான் பேச
நீயின்றி என் உயிரே;
எங்கேதான் நான் செல்ல
நீயின்றி தனிமையிலே ;
காயங்கள் பட்டாலும்
உன் பார்வை மருந்தாகும்;
கண்ணீராய் வடிக்கின்றேன்
கை விரலாய் நீ எங்கே;

நேரங்கள் போகிறது
நீ எங்கே வந்துவிடு.... தந்துவிடு

நடைபாதை வழிதனிலே
உன் நிழலை தேடுகிறேன்;
உன் பெயரை நான் எழுதி
என் உயிரை பார்க்கின்றேன்;
அதிகாலை பொழுதெல்லாம்
அடங்காமல் அழுகிறதே;
இரவெல்லாம் உன்போலே
பிடிவாதம் கொள்கிறதே... கொல்கிறதே

நிலவுண்டு; நீயில்லை
இருள்கிறதே என் வாழ்க்கை;
அலையுண்டு; நீயில்லை
காய்கிறதே என் உள்ளங்கை;
உன் ஸ்வாசம் தேடித்தான்
என் ஆயுள் நீள்கிறது;
உன் நினைவை எண்ணித்தான்
என் உலகம் சுழல்கிறது;

நேரங்கள் போகிறது
நீ எங்கே வந்துவிடு.... தந்துவிடு

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக