ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ம்.. ம்... ம்... ம்...


அது வேண்டும்
இது வேண்டுமென்று
அடம்பிடித்து கேட்பாள்;

பிஞ்சு விரல்களை நீட்டியபடி
வீதிக் கடையிலிருக்கும்
பொம்மைகளை எல்லாம்;

செல்ல மகளுக்கு அள்ளி கொடுக்க
சில்லரையில்லாது ஆயினும்
கவலை கொள்வதில்லை;

காரணம்...

எந்த கடையிலும்
விற்பதில்லை;

என்னை போல
ஒரு பொம்மை !!

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக