ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஐய்யா...

வருத்தம் என்பது சற்றும் எனக்கில்லை
வந்தவரெல்லாம் இங்கு நிரந்தரமில்லை
பொருத்தம் பார்த்து யாரும் பிறப்பதில்லை
நாம் போய்ச் சேரும் நிமிடம் தெரிவதில்லை
தீயும் மண்ணும் உயிரைத் தின்பதில்லை
நீயும் நானும் இறப்பறியா இறைவனின் பிள்ளை
மூப்பென்பதும் முடிவென்பதும் நமக்கில்லை
முத்தமிழுக்கு அழிவென்பது எப்போதுமில்லை
ஆயினும் அழுதேன் ஐய்யா...
பிரிவென்பது மௌனம் என்பதாலோ தெரியவில்லை ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக