ஞாயிறு, 26 ஜூலை, 2015

சங்கு சக்கர நாயகன்

பொன்னை
மண்ணை
தன்னை
தமையனை
என்னையும்
இழந்து
தர்மத்தை
நிமிர்த்திய
தலைவனே ;


பெண்னென
பாராது
பெரும் சபை தனிலே
தலை மயிர் இழுத்து
அதர்மம்
தாண்டவமாடிட ;


அவைதனில்
கண்ணை
இழந்தோர்
ஆன்றோர் ;


பகடை சூதின்
அடிமையென
பாவை யென பாராது
ஆடை களைய
அலறிட காக்க
சபைதனில்
அறமுமில்லை
ஐவரும்
கையறுநிலை ;


மானம் பறிக்க
மேனி துடிக்க
நியாயம் தவிக்க
மாயவனே
வேடிக்கை ஆகுமோ
காப்பது நின் கடன்
கதி எதுவாகினும்
நின் ஒப்புடன் ;


இரு கண் மூடி
இரு கை கூப்பி
வேண்டினேன்
இக்கணமே
வா என் அண்ணனே ;


அபயமளிக்க
வந்தான்
வானவில்லென
ஆடை தந்தான்
வஞ்சகரின்
நெஞ்சினிலே
அச்சமது விதைத்தான் ;


நீதியது
மொழிந்து
அநீதியது
அழிந்து
கீதையது
பொழிந்து
சங்கெடுத்து
ஊதினான் ;


பெரும்
போரினில்
அதர்மமது
தீர்ந்து
தர்மமது
இதுவென்று
சங்கடங்கள்
நீக்கினான்
சங்கு சக்கர
நாயகன் ;


கண்ணன் ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக