ஞாயிறு, 26 ஜூலை, 2015

நரசிம்மனாய் வா

அழைக்கின்றேன் கண்ணா அபயம் அளிக்கவா
தவிக்கின்றேன் கண்ணா அநீதி தடுக்கவா
சங்கடங்கள் தீர்க்க சங்கெடுத்து ஊதவா
மண்ணோடு மண்ணாகட்டும் அதர்மம் அழிக்கவா

பெரும் படையது சிற்றெறும்பென நசுக்கவா
கொடுமையது வீழ்ந்திட குருதி குடிக்கவா
அடிமையது அகல ஆயுதங்கள் ஏந்திவா
ஆணவச் சிரம் கொய்ய சக்கரம் வீசவா

என் சகாயனே இது யாவும் சட்டென நிகழ நரசிம்மனாய் வா~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக