ஞாயிறு, 26 ஜூலை, 2015

மனமது பிடிபடவில்லையடா

மனமது பிடிபடவில்லையடா
காற்றென நினைவது ஒரு நிலையி ல்லையடா
உயிரது உடலி ல்லையடா
தவியாய் தன்னிலையில் என் நிழலி ல்லையடா

சிறைதனில் பிறந்தாயடா
ஆகையால் இதயச் சிறைபிடித்தல் உனக்கெளிதானதடா
ஆயர்பாடி மாளிகையில் வளர்ந்தாயடா
ஆதலால் மங்கையர் மயங்க மாயம் யாவும் புரிவாயடா

சொன்ன சொல் கேளாத வம்பனடா
யசோதா ஆத்திரம் கொள்ள ஊரில் யாவரும் குற்றம் சொல்வாரடா
மண்ணை அள்ளித் தின்னும் மழலையடா
மாயையவள் மார்முலை பால்குடித்துக் கொன்றாயடா

மழை கொட்ட செய்வதறியாது மன்றாடிட
மலையதனை சுட்டு விரலால் குடை செய்தாயடா
பிழை செய்தால் மன்னித்து பொறுத்தருள்வாயடா
சிறு பிள்ளை போல் சிரித்தே எனைக் கொல்வாயடா

வெண்ணெய் திருடுவதில் கள்வனடா
அதுபோல் கன்னியர் நீராட மேலாடை கவர்வதில் வல்லவனடா
கோபியர்கள் தேடும் பெரும் காதலனடா
பூவையர் பூக்க புல்லாங்குழ லிசைக்கும் புருசோத்தமனடா

அன்னியர் எவராயினும் அன்புரைப்பாயடா
பண்புடையோர் வார்த்தையின் பொருள் கூற்றானவனடா
ஐவரின் நேர்மைக்கு நல் கீதையுரைத்தாயடா
பாரதப் போர் முற்றுக்கும் காரணம் நீயடா

நியாயம் வழங்குவதில் பரசுராமனடா
பெண்மை போற்றுவதில் ஶ்ரீ ராமனடா
நல் வாழ்வது அளிப்பதில் நாராயணனடா
நாளும் நம்பியே கை தொழுதேன் என் மயிற்பீலிக் கண்ணனையடா ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக