ஞாயிறு, 26 ஜூலை, 2015

மாதவா

என்ன நான் கேட்பேன் உன்னிடம்
மண்ணையும் விண்ணையும் அளந்த உன்னில் ஓரிடம் ;

கள்வனெனச் சொல்வதேன்
நீ வெண்ணெய் திருடன்
எங்கே ஒருமுறை காதல் செய்து என்னத் திருடேன் ;

பெண்கள் யாவரும் மயங்க புல்லாங்குழல் ஊதும் மாதவா
அதில் கண்கள் கிறங்கி
நாளும் திங்களாக நான் தேய வா ;

பண்ணிசைத்துப் பாடி நின்னை அழைக்க வா
பரந்தாமா நின் மாரினில் என் முகம்தனைப் புதைக்க வா ;

தள்ளி நின்று எள்ளி நகையாடாது
நின் கையிரண்டில் அள்ளிக் கொள்ள வா
பள்ளி கொண்ட நிலையினிலே நின் பாதமதனை புள்ளி மானென வருட வா ;

பார்க்கடலை தேகமென உடுத்த நீல வண்ண புன்னகை அன்பா
பாவை பார்வையினை மூடி விட்டேன்
பாவம் இவளென இமை திறக்க முன்னே வா ;

எம் கண்ணா ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக