
காரிருள் யாவும் நின் மேனியாகுதே
பொன்னகை யாவும் ஒருசேரப் புலம்புதே
நின் புன்னகையின் பூவிதழ் அரும்புதே
எண்ண அலைகள் மெல்ல மயங்குதே
பண் புல்லாங்குழல் இசையதனில் பொழுது உருகுதே
மண்ணில் உள்ளவை யாவும் மாயும் மாயையே
எனில் நின்மீதுள்ள பேரன்பு ஒன்றே வாழ்வே
பெரென வேறெதுவும் எனக்கிங்கு வேண்டுவதில்லையே
வேரென வேண்டுவது யாதெனில் நின் காதலே
அது பெற வெகு நேரமது ஆகினும் சம்மதமே
எதுவாயினும் நேசம் மாறாது மனம் நோகாது காத்திருப்பேனே
சீக்கிரம் எம் கரம் பற்ற இக்கணமே வா கண்ணனே ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக