ஞாயிறு, 26 ஜூலை, 2015

வா கண்ணனே

கண்ணிரெண்டும் நின்னைத் தேடுதே
காரிருள் யாவும் நின் மேனியாகுதே
பொன்னகை யாவும் ஒருசேரப் புலம்புதே
நின் புன்னகையின் பூவிதழ் அரும்புதே
எண்ண அலைகள் மெல்ல மயங்குதே
பண் புல்லாங்குழல் இசையதனில் பொழுது உருகுதே
மண்ணில் உள்ளவை யாவும் மாயும் மாயையே
எனில் நின்மீதுள்ள பேரன்பு ஒன்றே வாழ்வே
பெரென வேறெதுவும் எனக்கிங்கு வேண்டுவதில்லையே
வேரென வேண்டுவது யாதெனில் நின் காதலே
அது பெற வெகு நேரமது ஆகினும் சம்மதமே
எதுவாயினும் நேசம் மாறாது மனம் நோகாது காத்திருப்பேனே
சீக்கிரம் எம் கரம் பற்ற இக்கணமே வா கண்ணனே ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக